சேலம்: இளம்பெண் செல்போனுக்கு அடிக்கடி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய 12ஆம் வகுப்பு மாணவன் காவல்தூறையினரிடம் பிடிபட்டான். காவல் துணை ஆணையர் மாணவனுக்கு எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவரின் செல்போனுக்கு கடந்த 3 நாட்களாக அறிமுகம் இல்லாத ஒரு எண்ணில் இருந்து தேவையில்லாத அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் வந்துள்ளன. அறிமுகம் இல்லாத எண் என்பதால் அவர் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கவில்லை.
இதை தொடர்ந்து ஆபாச குறுஞ்செய்திகள் வரத்தொடங்கின போன் செய்தால் பேச வேண்டும் என மிரட்டியும் குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் பயந்த அப்பெண் குறுஞ்செய்தி வந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசியபோது சம்பந்தப்பட்ட நபர் ஆபாசமாக பேசியுள்ளார். மூன்று நாட்களுக்கும் மேலாக தொல்லை தொடரவே நேற்று அப்பெண்ணின் தந்தை காவல் உதவி ஆணையர் சத்யபிரியாவிடம் தொலைபேசியில் புகார் செய்தார்.
துணை கமிஷனர் சத்யபிரியா உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட எண்ணின் முகவரியை ஒரு சில மணி நேரத்தில் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அவர் கிச்சிபாளையத்தை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவன் என்பது தெரியவந்தது. உடடினயாக அவனை பிடித்து, கிச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணைக்காக ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.
காவல்துறையினர் அவனிடம் நடத்திய விசாரணையில், ‘தெரியாமல் செய்துவிட்டேன், இனிமேல் தவறு செய்யமாட்டேன்‘ என சந்திரன் அழுதான். பள்ளியில் படிக்கும் மாணவன் என்பதால் அப்பெண்ணின் தந்தையும் மனமிரங்கி புகாரை திரும்ப பெற்றார். குழந்தைகளின் செயல்கள் அனைத்தும் பெற்றோரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற தவறான செயல்களில் மாணவர்கள் ஈடுபடமாட்டார்கள் என காவல் உதவி ஆணையர் சத்யபிரியா தெரிவித்தார்