Thursday 30 June 2011

மக்காவுக்கு ஹஜ், உம்ரா செல்ல காதியானிகளுக்கு தடை !


மும்பை : வருடம் ஒரு முறை முஸ்லீம்கள் மக்காவுக்கு செல்லும் புனித யாத்திரையான ஹஜ் மற்றும் பிற மாதங்களில் செல்லும் உம்ராவுக்கு அஹமதியாக்கள் எனும் காதியானிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சவூதி அரேபியா அரசுக்கு தேவ்பந்தில் உள்ள புகழ் பெற்ற இஸ்லாமிய பாடசாலையான தாருல் உலூம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக சவூதி அரசுக்கு தாருல் உலூம் சமர்பித்துள்ள மனுவில் “ இஸ்லாத்தை மறுக்கும் அஹமதியாக்கள் முஸ்லீம்களை போல் ஹஜ்ஜுக்கு வருவதால் அவர்கள் உண்மையான முஸ்லீம்களை குழப்பி வழி கெடுக்கின்றனர் என்றும் அவர்கள் மக்கா மற்றும் மதீனாவுக்கு வர தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மிர்ஸா குலாம் அஹ்மது என்பவரை பின்பற்றுபவரே அஹ்மதியாக்கள் அல்லது காதியானிகள் என்று அழைக்கப்படுகின்றனர். முஸ்லீம்களின் மத நம்பிக்கை படி முஹம்மதை இறைவனின் இறுதி தூதராகவும் இருதி காலத்தில் இமாம் மஹதி வருவார் என்றும் நம்புகின்றனர். ஆனால் காதியானிகள் மிர்ஸா குலாமை மஹதி என்றும் முஹம்மதுக்கு பின் மிர்ஸா குலாமையும் நபியாக நம்புவதால் பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் அவர்கள் முஸ்லீம்கள் அல்ல என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அம்ரிஸ்டர் அருகே உள்ள காதியான் எனும் ஊரில் தலைமையகத்தை வைத்துள்ள அஹமதியாக்களின் ஆன்மிக குரு கிலாபத்துல் மஸிஹ் மிர்ஸா மஸ்ரார் அஹ்மது லண்டனில் வசிக்கிறார். 1979-ல் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அஹமதியாக்கள் முஸ்லீம்கள் அல்லர் என்று எடுத்த தீர்மானத்தை நினைவூட்டி ஹஜ் உம்ரா வருபவர்கள் அதற்கான விண்ணப்பத்தில் முஹம்மதை கடைசி இறை தூதராக ஏற்று கொள்கிறேன் என்று கையொப்பமிட வேண்டும் என்றும் சவூதி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

ஓரினச்சேர்க்கை (Homosex) ‘எய்ட்ஸ்’ நோய் கடுமையாக பரவுகிறது!

 நியுயார்க் ஜுன் 30,  ‘ஓரினச்சேர்க்கை’ யால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்கள் மேற்கத்திய நாடுகளில் கடுமையாக பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் பலவற்றில் கொடுமையான எச்.ஐ. வி கிருமியால் வரும் எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களால் ஓரினச்சேர்க்கையில்  ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளை கடுமையாக பாதித்து பரவிக் கொண்டிருப்பது சிக்மா எய்ட்ஸ் ஆய்வு குழும ஆய்வுகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், மட்டும் கடந்த பத்தாண்டுகளில் கிட்டத்தட்ட ஐந்து லட்சத்து ஐம்பத்து ஐயாயிரம் ஓரின சேர்க்கையாளர்கள் எச் ஐ வி / எய்ட்ஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் ஒரு லட்ச்சத்திற்கும் மேற்பட்ட ‘ஓரின சேர்க்கையாளர்கள்’ எய்ட்ஸ் நோய் தோற்றால் இறந்து போனதாக அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மொத்த எய்ட்ஸ் நோயாளிகளில் 48% சதவீதம் பேர் ‘ஓரினச்சேர்க்கை’ பழக்கத்தால் இந்த நோய்க்கு இலக்காகியுள்ளதாக தெரிகிறது. இதே போன்று இங்கலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், ‘ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் மற்றும் பால்வினை தாக்கியவர்களின் சதவீதம், சாதாரண ஆண் மற்றும் பெண் இடையேயான செக்ஸ் உறவில் இடுபடுபவர்களை விட பல மடங்கு அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

அதே வேளை, இவ்வாறான ‘எய்ட்ஸ் மற்றும் பால்வினை’ நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் 53% பேர் 35 வயதுக்கும் குறைவான வயது பிரிவினர் என்ற அதிர்ச்சியளிக்கும் உண்மையும் தெரிய வந்துள்ளது. இது போன்ற உலகெங்கும் பல நாடுகளில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு ‘ஓரினச்செர்க்கையால்’ எய்ட்ஸ் பரவும் அபாயத்தை உறுதி செய்துள்ளது.

குறிப்பாக ‘ஓரினச்சேர்க்கையாளர்கள்’ குறிப்பிடத்தக்க அளவில் பெருகிவரும் லத்தின் அமெரிக்காவில், எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளவகளிடையே நடத்தப்பட்ட ஆய்வில் எய்ட்ஸ் நோய் தோற்று குறித்த இதுவரை வெளிவராத அதிர்ச்சிகரமான பல புதியஉண்மைகள் வெளிவந்துள்ளன.

முதலாவதாக, லத்தீன் அமெரிக்காவில் எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் பரவலுக்கு பிரதான காரணமாக ‘ஓரினச்சேர்க்கை’ விளங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லத்தின் அமெரிக்க நாடுகளில் ‘எய்ட்ஸ் நோயால்’ தாக்கப்பட்டவர்களில் 40% பேர் ‘ஓரினச்சேர்க்கை’ மூலமே நேரடியாக எய்ட்ஸ் நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதை விட மிகவும் மோசமான விடயம் என்னவென்றால், எய்ட்ஸ் பற்றிய சரியான அறிவுள்ள, உயர் கல்வி மற்றும் மருத்துவ துறையில் உள்ள ‘ஓரினச்செர்கையாலர்களிடையே’ நிலவும் ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று நிலவும் தவறான நம்பிக்கையாகும்.

இவ்வாறு ‘எய்ட்ஸ்’ தங்களை தாக்க வாய்ப்பில்லை என்று கருதும் ‘உயர் கல்வி, வேலை மற்றும் பொரளாதார’ பிரிவினரிடையே உள்ள ‘ஓரினச்சேர்க்கையில்’ ஈடுபடும் 35% பேருக்கு, எய்ட்ஸ் நோய் தோற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வுகளில், ‘ஓரினச்சேர்க்கை’ யில் ஈடுபடுவோரிடையே, எய்ட்ஸ், கிளமீடியா, கோனோரியா மற்றும் பிறப்புறுப்பு ஹெர்பிஸ் ஆகிய நோய் பதிப்பு கடந்த பத்து வருடங்களில் 100% க்கும் மேற்பட்ட அளவில் அதிகமாகியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பேஸ் புக் பற்றி பாலியல் துஷ்பிரயோகம் அதிச்சி ரிப்போர்ட்!

பேஸ் புக் பார்வையாளர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுக்கக் கூடிய செய்தி இது. பேஸ் புக், ட்விட்டர், லிங்ட்ஸ் இன் போன்ற சமூக இணைப்பு இணையத் தளங்களின் பார்வையாளர்களின் போட்டோக்கள் பயங்கரமாக பாலியல் ரீதியில் துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடிய அதிக பட்ச ஆபத்து உருவாகி உள்ளது.

ஆம், புதிதாக வந்து உள்ளதுhttp://www.orgasmprofile.com/என்கிற இணையத் தளம். இந்த இணையம் மூலமாக எவருடைய போட்டோவையும் செக்ஸ் வீடியோவாக மாற்றலாம். ஒலித் தொழிநுட்பமும் மிகவும்நேர்த்தியானது.என்கிற


எல்லாமே ஒரு ஏமாற்று வித்தைதான். ஆனால் மிகவும் நுட்பமானது. எவருடைய புகைப்படத்தையும் மேற்சொன்ன இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடியும். புகைப்படத்தில் தோன்றி இருந்தவர் 18 வயதுக்கு மேற்பட்டவர் என்று பிரகடனப்படுத்துதல் வேண்டும்.

ஒட்டுக் கேட்கும் கருவிகளை பயன்படுத்த தடை!

          புதுடில்லி: மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம் உள்ள ஒட்டுக் கேட்கும் கருவிகள் அனைத்தையும், தங்களிடம் ஒப்படைத்து விடும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் புலனாய்வுப் பிரிவுகளிடம், எந்த ஒரு மொபைல் போனையும் ஒட்டுக் கேட்கும் கருவிகள் உள்ளன. இவை இருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ., வரை தகவல்களை ஒட்டுக் கேட்கும் திறன் கொண்டவை. இக்கருவிகள், ஜி.எஸ்.எம்., மற்றும் சி.டி.எம்.ஏ., தொழில் நுட்பத்தில் இயங்கக் கூடியவை.

இக்கருவிகளைப் பயன்படுத்தி தொலைபேசிகள், மொபைல் போன்களை ஒட்டுக் கேட்பது சட்டப்படி குற்றம். மீறி அவற்றைப் பயன்படுத்தினால், இந்திய தொலைத் தொடர்பு சட்டத்தின் விதிகளை மீறிய குற்றமாகும். அதனால், அரசு மற்றும் தனியார் உளவு நிறுவனங்கள் அக்கருவிகளை தகவல் தொடர்புத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுப் படி, மத்திய அரசின் கீழ் இயங்கும், புலனாய்வுத் துறை (ஐ.பி.,), "ரா', மத்திய பொருளாதார புலனாய்வுத் துறை (சி.இ.ஐ.பி.,) வருவாய்ப் புலனாய்வு இயக்குனரகம், வருமான வரித் துறை, அமலாக்கத் துறை மற்றும் சி.பி.ஐ., ஆகிய அமைப்புகள் தங்களிடம் உள்ள ஒட்டுக் கேட்புக் கருவிகளை, உள்துறை அமைச்சகத்தில் ஒப்படைக்க வேண்டி வரும்.

Sunday 26 June 2011

அடுப்பை விட வயிறுதான் அதிகம் நேரம் எரிகிறது!

இன்றைய காலைப் பொழுதில் பல வீட்டு சமையல்கட்டில் அடுப்புகள் மெதுவாகத்தான் எரிந்திருக்கும். ஆனால் வயிறு மட்டும் வேகமாக பற்றி எரிந்தது.
பால்காரன் சத்தம் கேட்டு வெளியே வந்த பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட தலைப்பு செய்தி இதுதான்! கியாஸ் விலை ரூ.50  ஏத்திப்புட்டாங்களாமே...”

ஏன்தான் இப்படி ஏத்தி தொலைக்கிறாங்களோ... நம்ம மாதிரி நடுத்தர ஜனங்க இனி வாழவே முடியாது... ம்ம் என்ன செய்றது...? என்று அங்கலாய்த்து தவித்த பெண்கள் ஏராளம்.

வாழ்க்கை ஒரு போராட்டம் என்பார்கள். வீட்டு வாடகை, விலைவாசி உயர்வு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் கல்விக்கட்டணம் என்று பல செலவுகள் கழுத்தை நெரிக்கிறது. வரவுக்குள் திட்டமிட்டு குடும்பம் நடத்தும் நடுத்தர வர்க்கத்தினர் குடும்பம் நடத்த முடியாமல் திண்டாடுகிறார்கள்.

ஒவ்வொரு மாதமும் பட்ஜெட்டில் துண்டு விழுவதால் மாத கடைசியில் கடனுக்கு கையேந்துகிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கியாஸ் விலை திடீரென்று சிலிண்டருக்கு ரூ.50 உயர்த்தியது அவர்கள் வயிற்றில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது.

சென்னையில் இதுவரை சமையல் கியாஸ் சிலிண்டர் ரூ.352.35 ஆக இருந்தது. தற்போது ரூ.402.35 ஆக உயர்ந்துள்ளது. டெலிவரி சார்ஜையும் சேர்த்தால் ரூ.425 கொடுக்க வேண்டியதிருக்கும். கடுமையான விலை உயர்வை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போனார்கள் பெண்கள்.

வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!

இனி வருடம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்குச் சாவடியில் புதிதாக அலுவலர்களை நியமிக்கப்பட உள்ளனர்.
கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதனால் பணியாளர்களுக்கு தேவையில்லாத பணிச்சுமை ஏற்பட்டது
இதை குறைப்பதற்காக ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம் தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நிலையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓக்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களிடம் சேர்த்தல், நீக்குதல், பெயர், முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றிற்கான 6, 7, 8, 8ஏ படிவங்கள் தேவையான அளவு அளிக்கப்பட உள்ளன.

எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த ஆண்டு ஜன.1ம் தேதி அடிப்படையாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம். அதே போல் பெயர், முகவரி மாற்றம் மற்றும் தொகுதிக்குள் இடமாற்றம் சம்பந்தமாகவும் விண்ணப்பிக்கலாம்.


இறந்தவர்கள் மற்றும் தொகுதி விட்டு தொகுதி இடம் பெயர்ந்தவர்களின் பெயரும் உடனுக்குடன் நீக்கப்படும். இன்னும் ஒரு மாதத்திற்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியையும் தொடங்க உள்ளனர். நிலையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மதிப்பூதியமும் தேர்தல் கமிஷனால் வழங்கப்பட உள்ளது.

கார்பரேட் சாமியார் உதவியாளரிடம் சி.பி.ஐ. விசாரணை!

   சாமியார் பாபா ராம்தேவின் நெருங்கிய உதவியாளர் ஆச்சாரியா பாலகிருஷ்ணன்.

அவர் நேபாளத்தை சேர்ந்தவர் என்றும் இவரிடம் அனுமதி பெறப்படாத துப்பாகிகள் இருந்தன என்றும் இவர் போலி பாஸ்போர்ட் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் படி போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.

இது தொடர்பாக, போலீசாரின் பார்வை தன் மீது விழுந்ததால், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் தலைமறைவாக இருந்து வந்தார்.  பின்னர், திடீரென நிருபர்கள் முன்பு தோன்றிய ஆச்சாரியா பாலகிருஷ்ணன், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.

இந்நிலையில், ஆச்சாரியா பாலகிருஷ்ணன் போலி பாஸ்போர்ட் வைத்திருப்பதாக சி.பி.ஐ.க்கு மத்திய அரசிடம் இருந்து புகார் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த புகாரை சி.பி.ஐ. ஆய்வு செய்து வருகிறது. திங்கட்கிழமை ஆச்சாரியா பாலகிருஷ்ணன் மீது முதல்கட்ட விசாரணை பதிவு தொடங்கப்படும் என்று சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.

Saturday 25 June 2011

தமிழீழ போராட்டமும் இலங்கை முஸ்லிம்களும் ஒரு பார்வை!

 கொழும்பின் தென்புற நகரான தெஹிவளை, முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஒரு பகுதி. கல்கிஸை தெஹிவளை மாநகர சபையில் முஸ்லிம் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு அதிக முஸ்லிம்கள் வாழும் ஒரு பகுதி.

தெஹிவளை 5 ஜீம்மா பள்ளிவாசல்கள் 8 சாதாரண பள்ளிவாசல்களை கொண்டது. அந்த அளவுக்கு அங்கு முஸ்லிம்கள் பெருமளவில் வாழ்ந்து வருகிறார்கள்.

இலங்கை அரசியல் பொளத்த மயமாக்கப்பட்டு வருகிறது. பொளத்த மதம் அமைதியை விட்டு ஆயுதமயப்படுத்தப்பட்டு வருகிறது,

புத்தர் உயிர் வதை கூடாது என்று அகிம்சை போதித்தவர், அவர் பெயரை சொல்லி மனித வேட்டை ஆடப்படும் பூமியாக இலங்கை மாற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தெஹிவலை பாத்தியா மாவத்தை மஸ்ஜிதை பொளத்த துறவிகள் முற்றுகையிட்டு, தடைசெய்ய முற்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு பயந்து முஸ்லிம்களும் அந்த பள்ளிவாசலை மூடிவிட்டார்கள் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஒன்றை நம் கவனிக்க வேண்டியது உள்ளது அது " ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்" என்பதே. ஆரம்பம் முதல் தமிழ் மக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமையின்மை இப்பொது சிங்கள காடையர்களுக்கு ஒரு ஆயுதமாக மாறிவிட்டது.

தெஹிவளை விவகாரம் வெறுமனே அப்பகுதி முஸ்லிம்களின் பிரச்சனையல்ல. இலங்கை வாழ் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் உரிமை தொடர்பான பிரச்சனை.

தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பு இந்த போராட்டத்தை ஆரம்பிக்கும் போது அதில் முஸ்லிம்களையும் இணைத்து கொள்ளாதது ஒரு பெரும் தவறான விடயமே. இதனாலேயே தமிழீழ போராட்டம் தோல்வியை நோக்கி நகர்ந்தது.

புலிகள் ஆரம்பத்தில் பயிற்சிகள் கற்று கொண்டது பாலஸ்தீன விடுதலை இயக்கத்திடமே! இப்படி யாசர் அரபாதிடம் கொரில்லா பயிற்சி உக்திகளை கற்றவர்கள், ஏனோ இந்த போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் வித்தையை மறந்தார்கள்.

முஸ்லிம்களை வெறும் நிதி வசூல் செய்யும் ஒரு இயந்திரமாகவே பயன்படுத்தினார்களே அல்லாமல் 'அவர்களை அந்த போராட்டத்தில் இணைத்து கொண்டு முன்னேறும்' ஒரு வழியை புலிகள் தவறவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாது பிற்காலத்தில் பள்ளியில் தொழுகை நடத்தி கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களை கொன்று குவித்தது, மூதூர் வெளியேற்றம் இப்படி புலிகள் முஸ்லிம்களின் வெறுப்பை பரிபூரணமாக சம்பாதித்து ஈழத்தமிழர் போராட்டம் என்பது முஸ்லிம் சமூகம் இல்லாத ஒரு போராட்டமாக வடிவமைக்கப்பட்டது.

இதன்காரணமாக இவர்கள் போராட்டம் ஒரு வீரியம் பெற்றிருக்கவில்லை என்பதோடு, உலகின் ஒரு பெரும் சமூகத்தின் ஆதரவை, இலங்கையின் மூன்றாவது பெரும் மக்கள் சக்தியாக திகழும் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை பெற தவறியது அவர்களின் பேராட்டத்தை தோல்வியை நோக்கி தள்ளியது.

இது விசயத்தில் முஸ்லிம்களையும் நம்மால் குறை சொல்ல முடியும். அவர்களும் ஈழத்தமிழர் போராட்டத்தில் தங்களை தாமாகவே   இணைத்து கொண்டிருக்க வேண்டும். அவர்கள் அது விசயத்தில் ஏற்படுத்திய வெற்றிடம் 'இப்போது ஈழத்தமிழர் போராட்டம் ஒடுக்கப்பட்டு விட்ட கையோடு' சிங்கள இனவாத காலிகளின் கவனம் முஸ்லிம்கள் பக்கம் திரும்பி விட்டது.

ஈழத்து  போராட்டத்தில் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடி இருந்தால் இப்போது தனி தமிழீழம் அமைந்திருக்கும். உலக அளவில் அதற்க்கு ஆதரவும் இருந்திருக்கும். இப்போது சிங்களவர்களின் கண்கள் முஸ்லிம்கள் தொழில் வளங்களை கண்டு பொறாமை கொண்டுள்ளது. முஸ்லிம்களின் பொருளாதாரத்தை கைப்பற்றுவது அவர்களை இரண்டாம் தர சமூகமாக மாற்றுவது இதுவே அவர்கள் திட்டம்.

இனி பழையதை பேசி காரியம் இல்லை! இப்போதாவது இவர்கள் இணைந்து செயல்படுவார்களா? அப்படி செயல்படுவார்கள் என்றால் வெற்றி நிச்சயம். இலங்கை மற்றும் இந்திய முஸ்லிம்கள் இன்னும் பள்ளிவாசலில் புலிகள் நடத்திய தாக்குதலையும், மூதூர் வெளியேற்றத்தையும், சில லங்கா ஸ்ரீ இணையதளங்கள் முஸ்லிம்களை, அவர்களின் போராட்டங்களையும் தீவிரவாதம் என்று எழுதி வருவதையும் பற்றி பேசி வேறுபட்டு நிற்க வேண்டாம்.

மறப்போம் மண்ணிப்போம் என்று எண்ணி தமிழீழ போராட்டம் என்பது மதங்களை கடந்து தமிழர் என்ற ஒற்றுமை உணர்வோடு ஒரே தளத்தில் இருந்து செயல்பட்டாலே வெற்றி பெற முடியும் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

அன்புடன் ஆசிரியர்: புதியதென்றல்.
தகவல் : சிந்திக்கவும்

இலங்கை அரசை கண்டித்து முஸ்லிம்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்!

 தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்சேவைக் கண்டித்தும், தமிழக மீனவர்களை விடுவிக்க கோரியும், மாபெரும் போராட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இப்போராட்டம்  மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் தலைமையில் வெள்ளிக்கிழமை 24.06.2011 மாலை 4 மணிக்கு இலங்கை துணைத் தூதரகம் முன்பு நடைபெற்றது. .

இராமேஸ்வரத்தில் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்பு கட­ல் மீன் பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அத்துடன் அவர்களுக்குச் சொந்தமான ஐந்து படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

தொடர்ந்து இலங்கை அரசு ஈழத்தமிழர்கள் மீதும், தமிழக மீனவர்கள் மீதும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. ஆகவே இலங்கை அரசைக் கண்டித்து துணைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில் 500க்கும் மேற்பட்டோர் கைது செயப்பட்டனர்.

ஹிந்துத்துவா நடத்திய நெல்லி, பாகல்பூர் இனப்படுகொலைகள்!

அஸ்ஸாம் மாநிலம் கவுஹாத்தியிலிருந்து சுமார் 40 கி.மீ.  தூரத்திலுள்ள நெல்லி எனும் கிராமத்தில் 1983, பிப்ரவரி 18 அன்று ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் திட்டமிட்ட இனப்படுகொலை ஒன்று நடத்தப்பட்டது.

இதில் 2,191 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். 370 குழந்தைகள் அநாதையாக்கப்பட்டனர். 16 கிராமங்களிலிருந்த முஸ்லிம்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன.

இந்து தீவிரவாதிகள் பட்சிலம் குழந்தைகளை வெட்டி கிழித்து இரு கூராக்கினார்கள். மேலும் நெருப்பு குண்டம் வளர்த்து அதில் பெண்களின் கைகளில் இருந்த குழந்தைகளை பறித்து போட்டனர். அந்த குழந்தைகள் தீயில் கருகி சாவதை பார்த்து ரசித்து பேரானந்தம் அடைந்தனர்.

மறக்கப்பட்ட நெல்லி இனப்படுகொலை இந்தியாவில் ஹிந்துதுவாவினர் நடத்திய தொடர் இனப்படுகொலைகளின் ஒரு முன்னோட்ட மாகவே பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்தே டெல்லியில் 1984லும், பாகல்பூரில் 1989லும், மும்பையில் 1993லும் நாடு தழுவிய இனப்படுகொலைகள் நடைபெற்றன.

இதனுடைய உச்சகட்ட நிகழ்வுதான் குஜராத் இனப்படுகொலை. அதன் தொடர்ச்சிதான் இப்போது இந்தியா முழுவதும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்.

இந்திய அரசு நெல்லியில் உயிரிழந்தோருக்கான நிவாரணத் தொகையாக ரூ 5,000 வீதம் வழங்கியது. அதே சமயம் இதற்கு ஒரு வருடத்திற்கு பிறகு நடைபெற்ற சீக்கியர் படுகொலைக்காக ரூ.7 இலட்சத்தை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகல்பூர் கலவரம்:  பீகார் மாநிலம் பாகல்பூரில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவ தீவிரவாதிகளால் 1989 ல் கலவரம் நடத்தப்பட்டது. இதில் முஸ்லிம்கள் 116 பேர் கொல்லப்பட்டனர்.

 இந்த கலவரத்தை ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் திட்டமிட்டு நடத்தின.  ஜக்தீஷ்பூர் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ராமச்சந்திர சிங் மற்றும் கிராமத்தலைவர் தாக்குர் பாஸ்வான் ஆகியோர் இந்த படுகொலைக்கு உறுதுணையாக இருந்து செயல்பட்டனர்.

இதன் மூலம் சொந்த நாட்டில் 30,000 பேரை அகதிகளாக்கி, 3000க்கும் மேற்பட்ட வீடுகளைச் சூறையாடி, ஒரு பெரும் இன அழிப்பை நடத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்.
தகவல் : சிந்திக்கவும்

Friday 24 June 2011

கழுதையா? குதிரையா?

 ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்தில் சிலமாந்தூர் போலீஸ் நிலைய சரகத்தில் கர்நாடக மாநில எல்லைப்பகுதியில் உள்ள ஓடிகொண்டா சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்றை போலீசார் மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது, காரின் உள்ளே ஒரு பையில் ரூ.35 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த கார் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த கார் சத்யசாய் மத்திய அறக்கட்டளைக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

கார் டிரைவர் ஹரீஸ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சோதனையில் பிடிபட்ட பணமானது, புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் உள்ள சத்யசாய்பாபாவின் தனிப்பட்ட அறையான யஜுர் மந்திரில் இருந்து பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிந்திக்கவும்: சாய்பாபா என்பவர் மேஜிக் வித்தைகளை காட்டி பொதுமக்களை ஏமாற்றி சம்பாதித்த பணமும், நகைகளும் அவர் மரணத்திற்கு பின்னால் அவர் தனி அறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.

கடவுளின் அவதாரமாக தன்னை பெருவாரி இந்து மக்களிடம் காட்டிக்கொண்டு படித்த இந்து பண்டிதர்களிடம், மேதாவிகளிடம் கூட இவரின் கோமாளித்தனம், தெய்வீகமாய் எடுபட்டது.

சிலநேரங்களில் மனிதன் இறந்தபின்னால்தான் அவன் செய்த செயல்கள் குறித்த உண்மைகள் வெளியே வரும். "புழுதி அடங்கிய பிறகுதான்  தெரியும் தான் சவாரி செய்தது கழுதையா, குதிரையா என்று" என்ற பழமொழி போல்.
thagaval : சிந்திக்கவும்

14 வயது சிறுமியை கற்பழித்த 150க்கு அதிகமான காமக்கழுகுகள்!

 கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீர் (48) என்பவர் தனது 14 வயது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது சமீபத்தில் தெரியவந்தது.

சினிமா பிரபலங்கள், விஐபிக்கள், பிரபல தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சிறுமியிடம் செக்ஸ் வைத்தது தெரியவந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகாவிலும் பல விஐபிக்களின் பெயர் இதில் அடிபடுகிறது.

சினிமா பிரபலங்களின் உதவியுடன் அந்த சிறுமியை சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் சுதீர் நடிக்க வைத்தார். பின்னர், துணை நடிகை என்று சொல்லி விபசார புரோக்கர்களிடமும் அவளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது சமீபத்தில் அம்பலமாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி என்பதால் இதை பலாத்கார வழக்காக பதிவு செய்து கேரள மாநிலம் பரவூர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கடும் விசாரணையில் தந்தை சுதீர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் முதலில் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை சீரழித்த முக்கிய பிரபலங்கள் பெயர் பட்டியல் போலீசுக்கு கிடைத்தது.

இதற்கிடையே சிறுமியை குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்ற கான்ட்ராக்டர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கண்ணுமாமூட்டில் உள்ள தனது கெஸ்ட்ஹவுசில் வைத்திருந்தார் என்று தெரியவந்தது.

சிங்கப்பூர் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்த மணிகண்டனை சென்னை ஏர்போர்ட்டில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிஜோ அலெக்ஸாண்டர் தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். சிறுமி உள்பட பலரையும் அவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்கில் 150 பேர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தன்னுடன் இருந்தவர்களை நன்றாக ஞாபகம் இருப்பதாக மாணவி ( 9ம் வகுப்பு) கூறியுள்ளார். தங்கியிருந்த லாட்ஜ், பங்களா, கெஸ்ட்ஹவுஸ் ஆகியவற்றையும் கூறுகிறார். அவர் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
thagaval : சிந்திக்கவும்

கேன் வாட்டர் குடிப்பவரா உஷார் !!!

வீடுகளுக்கு வரும் ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற தண்ணீரை குடித்தால், நிமோனியா தொற்று ஏற்பட்டு நுரையீரல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
கோடை காலம் தொடங்கி விட்டதால், தண்ணீர் தாகமும் அதிகரிக்கும். தாகம் ஏற்படும்போது கிடைக்கும் தண்ணீரை குடிப்பது, கடைகளில் குளிர்பானம், மோர் என்று இதமாக சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது.
சாலை ஓரங்களில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படும் குளிர்பானம், மோர் வாங்கி குடிப்பதால் வெயில் காலங்களில் பலருக்கு தொண்டையில் கரகரப்பு, இருமல், சளி ஏற்பட்டு கஷ்டப்படுகிறார்கள்.
வெயில் காலங்களில் ஏற்படும் இதுபோன்ற தொண்டை பிரச்னைகளை தடுப்பது குறித்து இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழக கிளையின் தலைவரும், முன்னாள் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குனருமான டாக்டர் இளங்கோ கூறியதாவது:
தமிழகம் முழுவதும் குறிப்பாக நகர்ப்புறங்களில் குடிநீருக்காக 20 லிட்டர் கொண்ட ‘வாட்டன் கேன்’களை பயன்படுத்துகிறார்கள். கேன்களில் குடிநீர் வாங்கினால் அது சுகாதாரமாகத்தான் இருக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அது முற்றிலும் தவறு. உதாரணத்துக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்துதான் வாட்டர் கேன் சப்ளையாகிறது. இதில் ஒரு சில கம்பெனிகளில் தவிர பல கம்பெனிகளில் ஐஎஸ்ஐ முத்திரை குத்திய லேபிள் இருக்குமே தவிர, உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள தரத்துடன் தண்ணீர் சப்ளை செய்யப்படுவதில்லை.
உண்மையில் 100 சதவீத ‘வாட்டர் கேன்’களில் 60 சதவீதம் தண்ணீர் தரமற்றதாக உள்ளது.
இதுபோன்ற தரமற்ற வாட்டர் கேன் தண்ணீரை தொடர்ந்து குடித்து வருவதால் நமது உடம்பும் குறிப்பிட்ட தண்ணீரை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்துக்கு மாறிவிடும்.
ஆனால் திடீரென கோடை வெயிலில் சுற்றி விட்டு ஏதாவது ஒரு இடத்தில் அல்லது உறவினர், நண்பர்கள் வீடுகளில் போர் மற்றும் கிணற்று தண்ணீரால் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், மோர், ஐஸ் கிரீம் சாப்பிடும்போது தொண்டையில் அலர்ஜி ஏற்படுகிறது.
இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கரகரப்பு, சளி, காய்ச்சல் போன்ற நோயால் பாதிக்கிறார்கள். இது நிமோனியா தொற்றாக மாறி நுரையீரலையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நிமோனியா எந்த மருந்துக்கும் கட்டுப்படாத கிருமியாக உருவாகி உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
மேலும் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்களில் அதிகமானோர் சுவாச மண்டல தொற்று நோய் காரணமாக இறந்துள்ளது தெரியவந்துள்ளது.
நுரையீரலை பாதிக்கும் நிமோனியாவில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள குளிர் மற்றும் கோடை காலம் என எந்த சீசனிலும் குடிதண்ணீரை காய்ச்சி குடிப்பதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
தொண்டை கரகரப்பு பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் காது, மூக்கு, தொண்டை (இஎன்டி) டாக்டரிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.  இவ்வாறு. டாக்டர் இளங்கோ கூறினார்.
நன்றி :  இதஜ

பார் புகழும் சாமியார்களும் அவர்களின் மகிமைகளும்!

இந்தியாவை ஆட்சி செய்யும் சாமியார்களின் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கும் ஒரு விடயமாகும்.
இவர்கள் மக்களின் பணங்களை கொள்ளையடித்து எப்படி தங்களை வளர்த்துகொண்டார்கள் என்பதை பார்க்கும் போது வியப்பாகவும் பிரமிப்பாகவும் இருக்கிறது!
*  காஞ்சி சங்கராச்சாரி: காஞ்சி சங்கராச்சாரி ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடியை தாண்டும்.
புகழ்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை. சென்னை மந்தைவெளி ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்கியது. சென்னை திருவல்லிக்கேணி மாதவன் என்பவரைத் தாக்கியது. காஞ்சிபுரம் சங்கர மடத்தை விட்டு இரவோடு இரவாக நேபாள பெண்மணி ஒருவருடன் தலைக் காவேரிக்கு ஓடியது.
அனுராதா ரமணன் என்ற பிராமணப் பெண்ணை, கையைப் பிடித்து இழுத்ததால் அவர் டி.வி.யில் கண்ணீரும், கம்பலையுமாக பேட்டி கொடுத்தது. பெண்களுக்கு இடஒதுக்கீடு கூடாது, தமிழில் குடமுழுக்கு கூடாது என்று சொன்னது. சங்கரா பல்கலைக் கழகத்துக்கு இந்தியன் வங்கியில் இருந்து தவறாக ரூ.1 கோடி நிதியுதவி பெற்றது. ரா என்ற எழுத்தில் தொடங்கும் நடிகையோடு உல்லாசம் புரிந்தது.
*  பிரேமானந்தா: திருச்சி அருகே ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். பல நூறு கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இவருக்கு உண்டு. பல நூறு ஏக்கர் நிலத்தில் ஆசிரமம், மற்றும் நகைகள், பணம் என்று இவரிடம் கோடிகள் குவிந்து கிடந்தன.
புகழ்: போதை பொருள் வியாபாரம், ஆசிரமத்தில் உள்ள இளம் ஏழை பெண்களை வெளிநாட்டுகாரனுக்கு கூட்டி கொடுத்தது, கொலை செய்தது.  இதனால் அவர் மீது கொலை, கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த குற்றத்துக்காக சாமியார் பிரேமானந்தாவுக்கு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
*  நித்யானந்தா: 32 வயதேயான நித்தியானந்தா தமிழகத்தின் திருவண்ணா மலையில் பிறந்தவர். 33 நாடுகளில் 1200 மையங்கள், அமெரிக்க இந்துப் பல்கலைக்கழகத்தின் தலைவர், பெங்களூருக்கு வெளியே மைசூர் சாலையில் 200 ஏக்கர் பரப்பளவில் தலைமைப் பீடம். பெரும் செல்வாக்கு,
புகழ்:  நித்யானந்தா சாமியும், நடிகை ரஞ்சிதாவும் சல்லாபம். ஆசிரமத்து பெண்களை அமெரிக்கா லாஸ்வேகாஸ் நகருக்கு அழைத்து சென்று நிர்வாண நடனம் நடக்கும் கிளப்களில் அவர்களை நிர்வாணமாக்கி அவர்களோடு நடனம் ஆடியது பின்னர் விடுதி அறையில் அவர்களோடு செக்ஸ் வைத்து கொண்டது.
சாப்ட்வேர் என்ஜீனியர் படித்த பெண்ணை மது வாங்கி வரச்சொன்னது, மதத்தின் பெயரால் அவரை மது அருந்த சொல்லி பலவந்தபடுத்தி அவர் மயக்கநிலையில் இருக்கும் போது கற்பழித்தது. இப்படி பல பெண்களின் வாழ்க்கையை கெடுத்தது.
வாழ்க்கைக்குத் தேவையான 64 தந்திரங்களில் 6 வகையான தந்திரங்கள் செக்ஸ் தொடர்பானவை என்றும், அதைக் கற்றுத் தரும்போது நிர்வாணமாக இருப்பதும், உடலுறவு போன்றவற்றில் ஈடுபட வேண்டி வரும்.
என்று கூறி தனது தியான பீடத்துக்கு வரும் பெண்களிடம் ஒரு 10 பக்கம் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கியது,  இதுபோல் கூறி அந்த பெண்களை ஏமாற்றி செக்ஸ் உறவு கொண்டது. அமெரிக்காவை சேர்ந்த டக்ளஸ் மெக்கன்னர் என்பவரின் மனைவி ஷியாமளாவை அவரிடம் இருந்து அபகரித்தது.
சிவ் முரத்திவேதி: இவர் சத்ய சாய்பாபாவின் சீடர். சொந்தமாக கோவில், புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்கள்.
புகழ்: கோவில் சுரங்க அறையில் இளம் பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி வந்தது. கல்லூரி மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் என பல பெண்கள் கணவனை பிரிந்த பெண்கள் இவர்களை வைத்து கோவிலின் உள்ளே சுரங்க அறை அமைத்து விபச்சாரம் நடத்தியது.
டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைக்கப்பட்டது. டெல்லி தவிர பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி விபச்சாரத்தின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்.
* கல்கி பகவான்: விஜய்குமார் நாயுடு என்ற கல்கி பகவான். தன்னை கல்கி அவதாரம் என்றும், தன் மனைவியை அம்மா பகவான் என்றும் சொல்லிக்கொண்டவர். தன்னைக் காண வரும் பக்தர்களிடம் கட்டாய கட்டணமாக ரூ 5000 வரை பெறுகிறார். சிறப்பு தரிசனத்துக்கு ரூ 25000 கட்டணம். ஹோமம் செய்ய ரூ 60000 கட்டணம்.
புகழ்:  அம்மா பூஜை என்ற பெயரில் மட்டும் ரூ 240 கோடியும், விஜய்குமார் நாயுடுவின் மகன் ரியல் எஸ்டேட் என்ற பெயரில் பக்தர்களை ஏமாற்றி ரூ 3000 கோடியும் அடித்தது. இளம் ஆசிரம பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விருந்தாக அளித்தது. போதைப் பொருள் பதுக்கல், பல கோடி ரூபாய் மோசடி செய்தது.
* பாபா ராம்தேவ்: வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. பாபா ராம்தேவின் மொத்த சொத்து மதிப்பு 1100 கோடிக்கு மேல்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 100 ஏக்கர் நிலத்தில் ஆசிரமம். மற்றொரு நாட்டில் சொந்தமாக தீவு. வெளிநாட்டு விலை உயர்ந்த கார்கள், தனிவிமானத்தில் பவனி. ஓட்ட சைக்களில் வலம் வந்தவர் இப்போது ஹெலிகாப்டரில் வலம் வருகிறார்.
ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்கு வதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.
* ஸ்ரீ ஸ்வாமிஜி: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படும் பிரகாஷனந்த் சரஸ்வதி சாமியாரின் இருப்பிடம். அவருக்கு அங்கே 200 ஏக்கர் அளவில் ஆசிரமம் உள்ளது. வெளி நாடுகளிலும் கோவில்கள், மருத்துவ மனைகள் உண்டு.
புகழ்:  இவர் தனது ஆசிரமத்தில் இருந்த இரு பெண்களிடம் பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட இரு பெண்களும் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. முடிவில் இந்த சாமியாருக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 45 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
சத்திய சாய்பாபா: ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளில் சொத்துக்கள் உண்டு. ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும் வருமானம்.
புகழ்:  ஆசிரமத்தில் நடந்த படுகொலைகள். அவர் இறப்புக்கு பின்னே அவரது அறையை திறந்து பார்த்தால் கோடி கோடியாய் பணம் மற்றும் நகைகள், வைரங்கள் இப்படி புதையலாக கிடைத்தன. இணையதளங்களில் சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.
*  ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்: பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி.
*  ஆஸ்ரம் பாபு: டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஓராண்டு வரவு செலவு வர்த்தகம் 350 கோடி.
*  சுதன்ஷன் மகராஜூ:  நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு ஓராண்டு வரவு செலவு 300 கோடி.
*  அமிர்தானந்த மாயி:  பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. அமிர்தானந்த மாயியின் மொத்த சொத்து மதிப்பு 1200 கோடிக்கு மேல்.
*  முராரி பாபு:  பணக்காரர்களுக்காக மட்டும் பல ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி.
இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம்.
*  பங்காரு சாமியார்:  கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர்.
*  தீபக் தாக்கூர்: அமெரிக்காவில் வெள்ளையர்களுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத் தருகிறேன் என்று உலக ஆளவில் பல மோசடிகளை செய்து மில்லியன் டாலர்கள் வருமானம் ஈட்டுபவர்.
தீவிரவாத சாமியார்கள்:
*  சுவாமி ஆசிமானந்தா:  குஜராத் மாநிலம் டாங்ஸ் பகுதியில் வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற பெயரில் ஆசிரமம். பலகோடி ரூபாய் சொத்துக்கள்.
புகழ்:  மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி மற்றும் அஜ்மீர் தர்கா ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் முக்கிய குற்றவாளி. இப்போது சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
* பெண் சாமியார் சாத்வி பிரக்யா: இவர் ஹிந்துத்துவா சாமியார். இவருக்கும் வழக்கமான சாமியார்கள் போல ஆசிரமங்கள் உள்ளது.
புகழ்: இந்தியாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் மூளையாக இருந்து செயல்பட்டவர். மாலேகான், ஹைதராபாத் மக்கா மசூதி போன்ற குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆலோசனை மற்றும் பொருளாதார உதவி செய்தவர்.
இதுவல்லாமல் மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே  “குணமாக்கி’  நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.
நன்றி.சிந்திக்கவும்.

Thursday 23 June 2011

ரூ.10 லட்சம் வரையிலான கல்விக் கடன்களுக்கு வட்டி ரத்து!

"பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்து, தொழில் கல்விக்காக ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வட்டியை இனிமேல் அரசே செலுத்தும்" என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தொழில் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வங்கிக் கடன் பெற்ற ஏழை மாணவர்களின் வட்டியை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2009-10 கல்வி ஆண்டு முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டமானது, இந்திய வங்கிகள் சங்கத்தின் கீழ் உள்ள வங்கிகளில் பெற்ற கடன்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"அனைத்து வழிகளிலும் பெற்றோரின் ஆண்டு மொத்த வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் உள்ள, பொருளாதார நிலையில் நலிவுற்ற மாணவர்களுக்காக 2009-10 கல்வி ஆண்டிலிருந்து இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படிக்கும் நலிவடைந்த மாணவர்கள், ரூ.10 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் வட்டியை அரசே செலுத்தும்.

இதற்காக, மாநில அரசின் உரிய அதிகாரிகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட, வட்ட, யூனியன் அளவிலான அதிகாரிகளுக்குத் தகவல் அளிக்குமாறு அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வட்டி ரத்து சலுகையைப் பெற கல்விக் கடன் பெற்ற வங்கிக் கிளையின் அதிகாரிகளை மாணவர்கள் அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

இந்தத் திட்டத்தை அமல் படுத்துமாறு இந்திய வங்கிகள் சங்கத்தில் உள்ள உறுப்பு வங்கிகள் அனைத்தும் கேட்டுக் கொள்ளப்படுகின்றன. இந்தச் சலுகை திட்டம் தொடர்பான இதர விபரங்களை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் இணைய தளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம். சட்டப்படி உரிய அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட ஆண்டு வருமான சான்றிதழுடன் விண்ணப்பித்ததும் கல்விக் கடனுக்கான வட்டித் தொகை வரவு வைக்கப்படும்.

இதற்கான, விண்ணப்பங்களை அந்தந்த வங்கிக் கிளைகளில் அளிப்பதற்கான கடைசித் தேதி ஜுலை 20 ஆகும்." என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்  : இந்நேரம். காம்

Monday 20 June 2011

போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகதுஹு...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....


போர்க் பெப்பெரோனி (Pork Pepperoni) ஹலாலா? ஹராமா?

ஜன.30:வளர்ந்து வரும் இந்தியாவில் குவியும் வெளிநாட்டுப் பொருட்கள் மற்றும் கலாச்சராத்துடன் இப்பொழுது அதிகமாக வெளிநாட்டு உணவுப் பொருட்கள் அதிகமாகக் கிடைக்கிறது. அதில் முன்னிலையில் இருப்பது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) கலாச்சாரம்.

கம்பெனிகளில் வேலை பார்ப்பவர்கள் தாங்கள் வீட்டிற்குச் செல்ல நேரமாகிவிட்டாலும் அல்லது பார்ட்டி (Party) என்றாலும் ஆர்டர் பண்ணுவது ஃபாஸ்ட் ஃபுட் (Fast Food) ஆகத்தான் இருக்கும். அதிலும் முக்கியமாக பிஸ்ஸா (Pizza). பிஸ்ஸாவை நகரத்தில் இருப்பவர்கள் மட்டுமல்லாது கிராமங்களில் உள்ளவர்கள் கூட இப்பொழுது டிவி விளம்பரங்கள் மூலம் தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களுடைய ஓரே எண்ணம் ஒரு முறையாது இந்த பிஸ்ஸாவை ருசித்து விடவேண்டும் என்பதுதான்.

பிஸ்ஸாவை (Pizza) இந்தியாவில் PIZZA HUT DOMINO’S PIZZA என்ற இரண்டு கம்பெனிகள் விற்பனை செய்கின்றன. குறிப்பாக, பிஸ்ஸா பெரிய ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் (Shopping Complex) ளில்தான் கிடைக்கும். பிஸ்ஸா (Pizza) வெவ்வேறு ருசிகளில் கிடைக்கி்ன்றது. எடுத்துக்காட்டாக சைவம், அசைவம் (ஆட்டுக்கறி, மாட்டுக்கறி மற்றும் பன்றிக் கறி).

கடந்த டிசம்பர் விடுமுறையில் குடும்பத்துடன் சென்னைக்குச் சென்றிருந்தேன். புதிதாக ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் திறந்திருப்பதாகவும் எல்லாப் பொருட்களும் அங்கே கிடைப்பதாகவும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சென்றோம். ஒரு தளத்தில் PIZZA HUT கடையைப் பார்த்த என்னுடைய மகன்கள் "பிஸ்ஸா (Pizza) சாப்பிடலாம்" என்று அடம் பிடித்தனர். நான், "இந்தியாவில் உள்ள PIZZA HUT ஹலாலா என்று தெரியாது. ஆகையால் போக வேண்டாம்" என்று சொன்னேன்.

நிறைய முஸ்லிம் நபர்களை PIZZA HUT ல் பார்த்த என்னுடைய மகன்கள், "அங்கே பாருஙகள். முஸ்லிம் ஆட்கள் இருக்கிறார்கள்" என்று சொன்னார்கள். "ஹலாலாக இருப்பதனால்தானே அவர்கள் சாப்பிடுகிறார்கள்" என்று சொன்னார்கள். நானும் அரை மனதுடன் வெளிநாட்டில் உள்ள பிஸ்ஸாவிற்கும் இந்தியாவில் உள்ள பிஸ்ஸாவிற்கும் எப்படி சுவை வித்தியாசம் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று அங்கே சென்றேன்.

உணவுப் பட்டியலை (Menu Card) வாங்கி என்ன ஆர்டர் செய்யலாம் என்று பார்த்தேன். வெஜிடேரியன், ஃபியரி சிக்கன்... என்று பார்த்துக் கொண்டு வந்த எனக்கு PEPPERONI (100% Pork Pepperoni) என்று பார்த்தவுடன் தலை சுற்றியது.

உடனே வெளியே வந்து விட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த முஸ்லிம் குடும்பங்களைப் பார்த்து மனதிற்குக் கஷ்டமாக இருந்தது. Pork Pepperoni தவிர வேறு பிஸ்ஸாவை அவர்கள் சாப்பிடலாம் என்று எண்ணிக்கொண்டேன். இருந்தாலும் மனது கேட்கவில்லை. ஆகையால் அங்கே நின்றிருந்த சில முஸ்லிம் நபர்களிடம் "PIZZA HUT ஹலாலா?" என்று கேட்டேன். சிறிது யோசித்து விட்டு "ஹலால்தான்" என்றார்கள். ஆனால் Pork Pepperoni என்று உணவுப் பட்டியலில் போட்டிருக்கிறதே.. என்று இழுத்தேன். அதைப் பார்த்து விட்டு, "அதனால் ஒன்றுமில்லை" என்று சொன்னார்கள்.

மற்ற சிலர், "நாங்கள் வெஜிடேரியனைத்தான் வாங்குகிறோம்" என்று சொன்னார்கள். எனக்கு ஒன்று நன்றாகப் புரிந்தது. நிறைய போ்களுக்கு PORK என்றால் பன்றியின் இறைச்சி என்றே தெரியவில்லை. நான் அவர்களிடம் "PORK என்றால் பன்றியின் இறைச்சி" என்று சொல்லிவிட்டு வந்தேன். அவர்கள் நான் சொல்வதை நம்புவதா வேண்டாமா என்று அரை மனதுடன் வெளியே வந்தார்கள்.

இதற்கு முஸ்லிம்களின் அறியாமைதான் காரணம். "இந்தியாவில் கிடைக்கும் இறைச்சி எல்லாம் நம்மாளுகதானே (முஸ்லிம்கள்) அறுக்கிறார்கள்" என்று நினைப்பது. தற்பொழுது கிடைக்கும் வெளிநாட்டு உணவுப் பொருட்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றன. ஆகையால் ஹலாலாக இல்லாமல் இருக்கலாம். இந்தியாவில் பன்றி இறைச்சி அதிகம் சாப்பிடுதில்லை. ஆகையால் எல்லா உணவுக் கடைகளிலும், சூப்பர் மார்கெட்டுகளிலும் பன்றிக் கறி விற்க மாட்டார்கள் என்று நினைப்பது தவறு. PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA போன்றவை வளைகுடா நாடுகளில் ஹலாலாக இருக்கலாம். ஆனால் அவை இந்தியாவிலும் ஹலாலாக இருக்கும் என்று எண்ணுவது தவறு.

LARD எனப்படும் பன்றியின் கொழுப்பை பிஸ்ஸா சுவையாக இருக்க CHEESE ல் பயன்படுத்துகின்றனர். LARDஐ எல்லா பிஸ்ஸாவுக்கும் பயன்படுத்தமாட்டார்கள் என்று எந்த உத்திரவாதமும் இல்லை. நாம் வெஜிடேரியன் பிஸ்ஸாவைத்தானே சாப்பிடுகிறோம் என்று நினைப்பது மிகத் தவறு. பிஸ்ஸாவைச் சுட வைக்க வெஜிடேரியனுக்கும் மற்ற பிஸ்ஸாவிற்க்கும் வெவ்வேறான தட்டுக்களை உபயோகப்படுத்துவதில்லை. PORK மற்றும் LARD மற்ற பிஸ்ஸாவில் கலப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

உங்களுக்கு பிள்ளைகள், தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA ஹலால் இல்லை என்று எடுத்துச் சொல்லி மிகப் பெரிய தவறிலிருந்து தடுக்க அல்லாஹ் அருள் புரிவானாக. முஸ்லிம் சமூக அமைப்புகள் கூட மக்களிடம் இதனை எடுத்துச் சொல்லலாம்.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மற்றும் சொந்தங்களுக்கு SMS மூலம் "In India, Pizza Hut and Domino’s Pizza are NOT HALAL. Their PIZZA contains PORK (Flesh of PIG) and LARD (Fat of PIG)" என்று தெரியப்படுத்துங்கள்.

இன்னும் சந்தேகமா? PIZZA HUT மற்றும் DOMINO’S PIZZA பற்றி அவர்களின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளுங்கள்.
1. http://www.pizzahut.co.in/cheesybites_menu.php OR http://www.pizzahut.co.in/
2. http://www.dominos.co.in/nonvegpizzas.jsp
and Click CHEESE AND PEPPERONI menu.
தகவல் : http://ipcblogger.net/

ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸின் 100% கட்-ஆஃப் ஏன் தேசிய அவமானம்!

இறுதியாக அது நடந்துவிட்டது! கடந்த சில வருடங்களாக 95%, 96% என்றிருந்த கட்-ஆஃப் மதிப்பெண்கள் இந்த வருடம் 100%ஐ தொட்டுவிட்டது. அறிவியல் மாணவர்களுக்கு ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் கட்-ஆஃப் 100%, இந்து கல்லூரியில் 99%, லேடி ஸ்ரீ ராம் கல்லூரியில் 97%. இன்று இந்தியாவில் கல்வி என்பது மாணவர்களின் விருப்பத்தை    பொருத்ததல்ல மாறாக அவர்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை பொருத்தது.

முதலில் ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸின் கட்-ஆஃப் மதிப்பெண் பற்றிய தர்க்கத்தை பார்ப்போம்! அக்கல்லூரியின் முதல்வர், சந்தையில் நிலவும் தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் செயல்படுகிறார். காமர்ஸ் பாடத்தில் 96% மதிப்பெண் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கேலிக்குரிய வகையில் அதிகரித்திருப்பதால் தனது கல்லூரியில் சேர   காமர்ஸ் மாணவர்களுக்கான கட்-ஆஃப் 96% என்று அவர் முடிவுசெய்திருக்கிறார். வழக்கமாக, அறிவியல் மாணவர்களுக்கு கட்-ஆஃப் 4% அதிகம். ஆக, இந்த முறை அது 100% ஆகிவிட்டது. அதை அவர் 99% என நிர்ணயித்து கேலியிலிருந்து தப்பித்திருக்கலாம். ஆனால் 100% என்று அறிவிப்பது தனது கல்லூரிக்கு பிரபல்யத்தையும், மிகுந்த மதிப்பையும் பெற்றுத்தரும் என்று அவர் நினைத்திருக்கலாம். இது ஒரு காமர்ஸ் கல்லூரி. ஐஐடி-யில் சேரமுடியாது போகும் அறிவியல் மாணவர்கள் தங்களது மிக அதிகமான மதிப்பெண்கள் காரணமாக இங்கு சேர வருகிறார்கள். அடுத்த ஓரிரு வருடங்கள் ஐஐடி நுழைவுத் தேர்விற்காக படித்து அங்கு இடம் கிடைத்தவுடன் இந்தப் படிப்பை பாதியில் விட்டுச்செல்கிறார்கள். இந்த நிலையில் காமர்ஸ் பாடத்தை விரும்பி தேர்ந்தெடுத்து படிக்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை தராது பாதியில் படிப்பை விட்டுப்போகும் அறிவியல் மாணவர்களுக்கு ஏன் தரவேண்டும்?

100% கட்-ஆஃப் அறிவிப்பு அவர்களுக்கே இடியாகிவிட்டது. பல வருடங்களுக்கு முன்னர் தான் பள்ளி இறுதித் தேர்வில்  64% மதிப்பெண்கள் மட்டுமே எடுத்ததாகவும் ஆனால் ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் இடம் கிடைத்து படித்ததாகவும் ஐஐபிஎம்மில் பேராசிரியராக பணிபுரியும் ஒருவர் கூறினார். சில வருடங்களுக்கு முன்னர் தனது மகனை அதே கல்லூரியில் சேர்க்க விரும்பிய போது முடியவில்லை. காரணம், கட்-ஆஃப் 90%க்கும் அதிகமாக இருந்தது. கட்&ஆஃப் அதிகரித்திருந்த அதே வேளையில் கல்லூரியின் உள்கட்டமைப்பில் எந்த மாற்றமும் இல்லாததை அவர் பார்க்க நேர்ந்தது. மேலும் பல வருடங்களுக்கு முன்னர் இருந்த அதே எண்ணிக்கைதான் இப்போதும் (இந்த வருடமும் ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸில் 272 இடங்கள்தான்). பேராசிரியர்கள் விஷயத்திலும் நிலைமை மோசமடைந்திருக்கிறது. சமீபத்தில் டைம்ஸ் நௌ       தொலைக்காட்சி சானலில் நடந்த விவாதத்தின் போது அக்கல்லூரியின் முதல்வர் பேசிய பேச்சே அதற்கு சாட்சி. இதற்கு முன்னர் நான் அக்கல்லூரியின் பேராசிரியர்களுடன் பேசிய சந்தர்ப்பங்களும் எனக்கு எந்த மகிழ்ச்சியையும்         உண்டாக்கவில்லை.

இங்குதான் நமது கல்வியின் முரண்நகை இருக்கிறது. கல்வியில் செய்யப்படும் முதலீடு எந்த ஒரு நாட்டிற்கும் மிகுந்த   லாபத்தையே தருகிறது. இதையே ஐநா வளர்ச்சி திட்டம் கூறுகிறது. ஆனால் இந்தியாவில் கல்வியும் மருத்துவமும் மிகுந்த பற்றாக்குறை நிலவும் விஷயங்களாக இருக்கின்றன. ஆக, சீரழிந்த நிலையிருக்கும் கல்லூரிகள் பெற்றுள்ள கடந்த கால மரியாதை காரணமாகவும், இப்போது நிலவும் பற்றாக்குறை காரணமாகவும் ஏராளமான மாணவர்களை கவர்ந்திழுக்கின்றன. தேசிய கட்டுமானத்தில் தனது பங்களிப்பை அதிகரிக்கும் வண்ணம் தனது கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களை  ஐஐஎம் அதிகரிக்காமல் தங்களிடம் பயின்று வேலைக்கு போகும் மாணவர்களுக்கு அதிக சம்பளம் கிடைக்க  வேண்டுமென்பதற்காக இடங்களை மிகக் குறைவாக வைத்திருக்கின்றன. ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் போன்றவை இடங்களை அதிகப்படுத்தாதிருப்பதன் மூலம் தங்களது கட்-ஆஃப் மதிப்பெண்ணை உயர்த்தி ஏதோ தங்களது கல்லூரி ஆகச் சிறந்த கல்லூரி என்ற எண்ணத்தை உருவாக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அவர்கள் அளிப்பதோ மிகச் சாதாரண தரமுடைய கல்வி, அதிலும் அவர்களது பேராசிரியர்களின் தரம் மிக மோசமாக இருக்கிறது. தகுதியான மாணவர்கள் அனைவருக்கும் தரமான கல்வி தருவது குறித்த எந்த தெளிவான கருத்தும், கொள்கையும் நமது கல்வி அமைச்சகத்திற்கு இருப்பதாக தெரியவில்லை. இதை இரண்டு முறைகளை இணைப்பதன் மூலம் சாதிக்க முடியும். புகழ்பெற்ற கல்லூரிகளில் இருக்கும் இடங்களை அதிகப்படுத்துவது ஒரு வழி. இது போன்ற பல நூறு கல்லூரிகளை நாடு முழுவதிலும் உருவாக்குவது இரண்டாவது வழி. தரமான பேராசிரியர்களை உருவாக்க அரசாங்கம் பெரிய அளவில் முதலீடு செய்யவேண்டும்.   இந்த இடத்தில்தான் ஒரு தேசம் என்ற வகையில் நாம் என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறோம். மிகச் சிறந்த  மாணவர்களை பேராசிரியர் பணிக்கு ஈர்க்க நம்மால் முடிவதில்லை.

தனியார் துறை என்பது மற்றொரு வழி. இங்கு இரண்டு முக்கிய பிரச்னைகள் இருக்கின்றன. தனியார் துறை கல்லூரிகளை    ஆக்கபூர்வமான பங்களிப்பை செய்ய அனுமதிப்பதா அல்லது அவர்களை மிரட்டி பணம் பெற்று அவர்களது வளர்ச்சியை தடுப்பதா என்பதை அரசாங்கம் முதலில் முடிவு செய்ய வேண்டும். தனியார் துறைக்கு லாப நோக்கு இருக்கிறது என்பதை அரசாங்கம் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆகவே, குறைந்த கால அவகாசத்தில், கல்வித் தரத்தில் பெரும்    முன்னேற்றம் ஏற்படுகிற வகையில் முதலீடுகள் அங்கு அதிகம் வராது. கல்வி மற்றும் மருத்துவத் துறைகளைல் நீண்ட   காலத்திற்கு பிறகே தனியார் துறையால் சிறந்த பங்களிப்பை செய்யமுடியும், அதிலும் பல வருட போட்டிக்குப் பிறகு.

இந்த நிலையில், தரம் மற்றும் தேவை ஆகிய இரு விஷயங்களில் இருக்கும் இடைவெளியை நிரப்ப ஒரு  தீர்மானகரமான கல்விக் கொள்கை அரசாங்கத்திற்கு தேவை. அப்போதுதான் இந்தியாவின் இளைஞர் சக்தியை ஆக்கபூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஸ்ரீ ராம் காலேஜ் ஆஃப் காமர்ஸ் போன்ற கல்லூரிகளில் 280 இடங்களுக்கு பதிலாக 2800 இடங்கள் இருக்க வேண்டும். அப்போதுதான் அவை இந்தியாவின் பெருமையாக இருக்கமுடியும். இல்லாவிடில், அவை  கோமாளித்தனமான வகையில் மேட்டுக்குடி கல்வி நிறுவனங்களாக இருந்துகொண்டு மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க வேண்டியதுதான்.
தகவல் : The Sunday Indian (அரிந்தம் சவுத்ரி | ஜூன் 18, 2011 12:26 )

Wednesday 15 June 2011

தேர்தல் கணக்கு சமர்பிக்காத 7 சுயேட்சைகளுக்கு நோட்டீஸ்!


நெல்லை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 117 பேர் தேர்தல் செலவுக் கணக்கு சமர்ப்பித்துள்ளனர். தாக்கல் செய்யாத 7 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்.13ம் தேதி நடந்தது. இந்தத் தேர்தலில் நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லை, பாளை., நாங்குநேரி, ராதாபுரம், ஆலங்குளம், அம்பாசமுத்திரம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 10 சட்டசபை தொகுதிகளிலும் 124 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டன. சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் வெளியான நாளில் இருந்து ஒரு மாதத்திற்குள் தேர்தல் செலவு கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இதன்படி ஜூன் 13ம் தேதிக்குள் செலவு கணக்கு தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
நெல்லை மாவட்டத்தில் 10 தொகுதிகளிலும் மொத்தம் 117 வேட்பாளர்கள் தங்கள் செலவு கணக்கை தாக்கல் செய்துள்ளனர். சங்கரன்கோவில் தொகுதியில் இருவரும், கடையநல்லூர், ஆலங்குளம், நெல்லை, பாளை., நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் தலா ஒருவருமாக மொத்தம் 7 பேர் செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இந்த 7 பேருமே சுயேட்சை வேட்பாளர்கள்.
இதுகுறித்து தேர்தல் அலுவலர்கள் கூறுகையில், "தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிந்து விட்டது. எனவே இனி தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்தால் ஏற்றுக் கொள்ளப்படாது. செலவு கணக்கு தாக்கல் செய்யாத 7 சுயேட்சை வேட்பாளர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். இதற்கு அந்த வேட்பாளர்கள் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும்" என்றனர்.

பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்திய இஸ்ரேலிய அராஜகம்

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை ஹஷ்ரோன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலையில் உள்ள நான்கு பலஸ்தீன் பெண் கைதிகளை 'சோதனையிடல்' என்ற பெயரில் நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பலஸ்தீன் பெண்கள் அஹ்ரார் சிறைக் கைதிகளுக்கான கற்கைகள் மற்றும் மனித உரிமைகள் அமைப்பிடம் தமக்கு நேர்ந்த அநீதியைப் பற்றி முறையிட்டுள்ளனர்.

இப் பெண் கைதிகளில் ஒருவரிடம் கைத்தொலைபேசி ஒன்று இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் சோதனையிடுவதாகக் கூறிய ஆக்கிரமிப்புக் காவலர்கள், பலஸ்தீன் பெண் கைதிகளை நிர்வாணப்படுத்தியுள்ளனர். இதன்போது சம்பவ இடத்தில் 10 பெண் காவலர்கள், 5 ஆண்காவலர்கள், பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் புலனாய்வுத் துறையினர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைசாலை ஊழியர்கள் இப் பெண்கள் நால்வரையும் தனித்தனியே நிர்வாணப்படுத்தி, 'சோதனை'யிட்டுள்ளனர். இதன்போது சர்வதேச மனித விழுமியங்களுக்கு முற்றிலும் முரணாகத் தாம் பெரிதும் அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறி மேற்படி பெண்கைதிகள் நால்வரும் மனங்குமுறியுள்ளனர்.
மேற்படி பெண் கைதிகளைச் சோதனையிட்ட பின் அவர்கள், தொழுகைக்கு அணியும் ஆடைகள் மட்டும் அணிவிக்கப்பட்டு அங்கிருந்த விசாரணை அறைக்குள் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கொட்டடி ஆக்கிரமிப்புச் சிறைக்காவலர்களால் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடப்பட்டது.
இந்தத் 'தேடுதல் வேட்டை' சுமார் 6 மணிநேரம் தொடர்ந்தது. பலஸ்தீன் பெண் கைதிகளின் சிறைக்கொட்டடி தலைகீழாகப் புரட்டப்பட்டு சோதனையிடப்பட்ட போதிலும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைநிர்வாகம் குற்றஞ்சாட்டியது போன்ற கைத்தொலைபேசியொன்று அங்கே காணப்படவில்லை.
தேடுதல் வேட்டை இடம்பெற்ற ஆறு மணிநேரமும் மேற்படி பலஸ்தீன் பெண்கள் நால்வரும் உண்ணவோ, தொழவோ, கழிவறைக்குச் செல்லவோ அனுமதியளிக்கப்படவில்லை என்பதும், அவர்கள் மிகக் கடுமையாக அச்சுறுத்தப்பட்டுள்ளமையும் மிகத் தெளிவான மனித உரிமை மீறலாகும் என அஹ்ரார் அமைப்பின் பணிப்பாளர் ஃபுவாத் அல் குஃப்பாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைகளில் பொய்யான குற்றச்சாட்டுக்களின் பேரில் ஆண்,பெண், சிறுவர் என்ற வேறுபாடின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன் கைதிகள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படாமலும், தம் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் நிரூபிக்கப்படாமலும் மிக நீண்ட காலம் பல்வேறு சித்திரவதைகளையும் அவமானங்களையும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் : இந்நேரம். காம்

ஒஸாமாவின் உடலைத் தேடும் பணியில் அமெரிக்கர்

கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது.
ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 2 அன்று ஒஸாமா பின் லேடனை அமெரிக்க கடற்படையின் சீல் கமாண்டோக்கள் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் என்ற இடத்தில் சுட்டுக் கொன்றதாகவும் பின்னர் ஒஸாமாவின் உடலை கடலில் அடக்கம் செய்து விட்டதாகவும் அமெரிக்க ராணுவம் அறிவித்தது.
ஆனால் ஒஸாமா கடலில் அடக்கம் செய்யப்பட்டது சம்பந்தமாக ஆதாரங்கள் எதையும் அமெரிக்கா வெளியிடவில்லை. அனைத்து சோதனைகளையும் முடிந்த பின்னர் வடக்கு அரபிக்கடல் பகுதியில் முஸ்லிம் மத சடங்குகள் செய்யப்பட்ட பிறகு அதிக எடையுள்ள ஒரு பையில் வைத்து ஒஸாமாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஒஸாமாவின் உடலைக் கண்டு பிடிப்பதற்காக முன்வந்துள்ளார் பில் வாரன் என்ற அமெரிக்கர். இவர் கலிபோர்னியாவைச் சார்ந்தவர். கடலில் புதையலைக் கண்டுபிடிப்பதற்காகவும் மூழ்கிய கப்பல்களைக் கண்டு பிடிப்பதற்காகவும் உள்ள நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்தத் தொழிலை இவர் 1972 முதல் செய்து வருகிறார். ஒபாமா அரசை தான் நம்பவில்லை என்றும் அதனால்தான் பின்லேடன் உடலைத் தேடும் பணியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதிநவீன சாதனங்கள் உதவியுடன் இந்தப் பணியை செய்யவிருப்பதாகவும் இதற்கு ஏறத்தாழ 400,000 டாலர் செலவிட இருப்பதாகவும் பில் வாரன் தெரிவித்துள்ளார்.

தான் ஒரு அமெரிக்க தேசபக்தன் என்பதால் ஒஸாமாவின் உடலைக் கண்டறிந்து உலகுக்குக் காட்டி உண்மையை உணர்த்த இருப்பதாக சொல்கிறார் 59 வயதாகும் வாரன். ரஷ்யாவைச் சார்ந்த தனது நண்பி ஒருவர் ரஷ்யாவில் உள்ள உயர்நிலை காவல் அதிகாரிகள் ஒஸாமா கொல்லப்பட்டதை நம்பவில்லை என சொன்னதுதான் தனது இந்த முடிவுக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தகவல் : இந்நேரம். காம்

Wednesday 8 June 2011

ஆயுதமேந்தித் தாக்குவோம் என்ற ராம்தேவ்

டெல்லி: அடுத்த முறை நாங்கள் போராட்டம் நடத்தினால், ஆயுதமேந்துவோம். எங்களைத் தாக்குவோரைத் திருப்பித் தாக்குவோம். இதற்காக 11,000 பேர் கொண்ட படையை உருவாக்குவோம் என்று கூறியுள்ள பாபா ராம்தேவுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தனது ஹரித்வார் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ராம்தேவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், நாங்கள் அடுத்த முறை போராடும்போது வெறும் கையுடன் வர மாட்டோம். 11,000 ஆண், பெண்களைக் கொண்ட படையை உருவாக்குவோம்.
அடுத்து ராம்லீலா மைதானத்தில் ராவண லீலாதான் நடைபெறும். எங்களை யார் அடித்தாலும் திருப்பி அடிப்போம். ஒவ்வொரு பிராந்தியத்திலும் 20 ஆண்களையும், 20 பெண்களையும் தேர்வு செய்து அவர்களை ஊழலுக்கு எதிரான போர்ப்படையாக உருவாக்குவோம். இவர்கள் 35 முதல் 40 வயது கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆயுதம் கொடுத்து, அவர்களை படை போல தயாரிப்போம். இது ஒரு ராணுவம் போல செயல்படும் என்றார் ராம்தேவ்.
இந்தப் பேச்சுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கான இணை அமைச்சர் நாராயணசாமி கூறுகையில், ராம்தேவின் இந்தப் பேச்சை உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இது தேச விரோத பேச்சாகும். இதுகுறித்து நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே ஆயுதமேந்திப் போராடுவோம் என்று ராம்தேவ் கூறுகிறார். அவரை ஆதரிக்கும் பாஜக, இதை ஆதரிக்கிறதா என்பதை விளக்க வேண்டும். அதேபோல 2ம் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று அன்னா ஹஸாரே கூறியுள்ளார். இதுவும் கண்டனத்துக்குரியது. தற்போது மத்தியில் நடந்து வருவது சட்டப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் அரசு. இந்த அரசுக்கு எதிராக 2ம் சுதந்திரப் போரில் ஈடுபட்டுள்ளோம் என்று அவர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
தகவல் : ஒன்இந்திய 
இவர்கள் ஊழலுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் இடுபட்டுள்ளனர்கள ? இல்லை உள்நாட்டு போருக்கான திட்டமா ? "காவித் தீவிரவாதத்திலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ். மற்றும் வி.எச்.பி.யால் திட்டமிடப்பட்டதே இந்த உண்ணாவிரதம்" என்று  திக்விஜய் சிங் கூறினார். ஆனால் இவர்களின் இந்த அறிவிப்பு "வெளிப்படியான தீவிரவாதிகள் " என்பதை கட்டுகிறது, மத்திய அரசு கண்டனம் தெரிவிப்பதை விட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும், மேலும் லோக்பால் மசோதாவை நிறைவேற்றவேண்டும் , ஊழல்  இல்லா இந்தியாவை உருவாக்கவேண்டும் 
- அப்துல்லாஹ்