Saturday 24 September 2011

நிகாப் அணிந்த பெண்களுக்கு அபராதம் -பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப் உடைக்கு கடந்த ஏப்ரல் மாதம் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை மீறி நிகாப் அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதுவரை இவ்வாறு தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதி்ப்பது இதுவே முதல் முறையாகும்.

இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.