இந்தத் தடையை மீறி நிகாப் அணிந்து வந்த இரண்டு பெண்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. இதுவரை இவ்வாறு தடையை மீறிய பெண்களுக்கு காவல்துறையினர் உடனடியாக அபராதம் விதித்திருந்தாலும் நீதிமன்றம் இவ்வாறான தடைக்கு அபராதம் விதி்ப்பது இதுவே முதல் முறையாகும்.
இதனை எதிர்த்து ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் முறையிடப்போவதாக இரு பெண்களும் தெரிவித்துள்ளனர்.