Thursday 8 September 2011

காரில் நகை திருட்டு

தருமபுரி மாவட்டம், அரூரை சேர்ந்தவர் ஆறுமுகம். சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமணத்தில் பங்கேற்ற இவர் குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை வேலூர் வழியாக காரில் சென்றார்.வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே காரை நிறுத்திவிட்டு அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டு திரும்பிய போது காரில் வைத்திருந்த 7.5 பவுன் நகையை காணவில்லையாம்.இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸôர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
நன்றி : தினமணி