Saturday 2 July 2011

பூமியில் மோதும் கற்களால் பாதிக்கும் நாடுகள்!

விண்வெளியில் உள்ள சிறு கோள்கள் பூமியில் மோதினால் பேரழிவிற்கு உள்ளாகக்கூடிய நாடுகளின் பட்டியலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.
சவுத்ஹெம்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் இப்பட்டியலை வெளியிட்டுள்ளனர். இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் மிகுந்த அழிவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா, அமெரிக்கா, இந்தோனேசியா, இந்தியா, ஜப்பான், பிலிபைன்ஸ், இத்தாலி, பிரிட்டன்,
பிரேசில், நைஜிரியா ஆகிய நாடுகள் இந்த சிறு கோள்களின் தாக்குதலுக்கு உள்ளானால் அங்கு மிகுந்த உயிரிழப்புக்கள் நிலவும் சாத்தியம் உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 12 மைல்கள் விட்டமுடைய சிறுகோளொன்று பூமியில் மோதினால்ல் இங்குள்ள தாவரங்கள் மற்றும் விலங்குகள் அனைத்தும் முற்றிலும் அழிவுக்கு உள்ளாகும் என்வும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.இத்தகைய ஒரு தாக்குதல் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்ததாகவும் இதன் போதே டைனோசர்கள் முற்றாக அழிந்ததாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
தகவல் : தினகரன் 

ஞானப்பறவைகள்!

வழக்கமான வாழ்க்கையைத் துறந்து தன்னிலை அறியும் வேட்கையில் வாழ்வின் பாதையை மாற்றி பயணித்து வெற்றி கண்டவர்கள் சித்தர்கள்.

போகர், திருமூலர், கொங்கனார், சுந்தரானந்தர், சிவவாக்கியார், உரோமமுனி, பாம்பாட்டி சித்தர், பதஞ்சலி முனிவர் போன்றோர் பிரபலமானவர்கள்.

யய்யாடி! கோவணத்தைக் கட்டிக்கிட்டு, கையிலே குச்சியை வெச்சிகிட்டு காடு, மலை, கொகைன்னு பெரிய க்ரூப்பே திருஞ்சிருக்கா? ன்னு வடிவேலுத்தனமா கேட்க வேண்டாம். இன்னும் கூட இந்தப்பட்டியல் நீளலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.

இவர்கள் பழமைமிகு தமிழ்க் கலாசசரத்திற்கும், அதீத சிந்தனைக்கும் கிடைத்த அரிய பெரும் பொக்கிஷங்கள் என்றே சொல்லலாம். அன்று சித்தர்கள் என்பவர்கள் உருவம் அற்ற ஓர் இறைவனையே வழிபட்டார்கள்.

அவர்களின் பார்வையில் கடவுள் வழிபாடு என்பது மனிதமனத்தின் செம்மைப்படுத்பட்ட உயர்நிலை. அத்தகைய மேலான மனப்பக்குவத்தை பயிற்சிசியின் மூலம் எவரும் அடையமுடியும் என்பதை அவர்களின் பல பாடல்கள் நிரூபிக்கின்றன.

இறைநிலை, இறைவன் என்கிற தத்துவார்த்தங்களை வைத்துக்கொண்டு மக்களை எமாற்றிடும் ஆன்மீகத்தை கடுமையாகச் சாடியுமிருக்கின்றனர். இது குறித்து பாம்பாட்டிச்சித்தர் பாடல் ஒன்றில்

பூசை செய்தாலே சுத்தபோதம் வருமோ?
பூமி வலம் செய்ததனார் புண்ணியம் உண்டோ?
ஆசையற்ற காலத்திலேயே ஆதி வஸ்துவை
அடையலாம் என்று துணிந்து ஆடாய் பாம்பே ...
என்று ஆன்மீகத்தின் பெயரால் செய்யும் கேலிக்கூத்தை கேள்விக் குள்ளாக்குகிறார்.

அகத்தியர் துவங்கி பல சித்தர் பெருமக்கள் அருளிய ஹோம முறைகளும் நமக்கு கிடைக்கின்றன. இந்த ஒரு குறிப்பிட்ட உயர்சாதிப் பிரிவினரால் மட்டுமே நடத்தப்படவேண்டும என்றும், அவர்கள் தான் அதை செய்து பலனை வழங்க வேண்டும் என்ற விதிகளை உடைத்து, ஆர்வம் உள்ள எவரும் ஹோமத்தினை செய்திடலாம் என்று வலியுருத்துகிறது சித்தரியல்.

வைத்தியம், வான சாஸ்த்திரம், இரசவாதம், சூத்திர சாஸ்த்திரம், யோகம் போன்றவற்றிலும் அவர்கள் தேர்ச்சி கண்டவர்களாக இருந்தனர். ஊனினைச் சுருக்கி, உள்ளொளி பெருக்கும் தன்மையினைக்கண்டு தெளிந்த மேதைகள் அவர்கள்.

இறைபக்தி இல்லாத ஒருவனிடம் எத்தனை செல்வங்கள் இருந்தாலும் அவையனைத்தும் பயனற்றவைகளாகவே போகும் என்றும்,  இறைபக்தியே ஒருவனை வாழ்க்கையில் உயர்த்தும் என்றும் சொன்ன இடைகாட்டுச் சித்தர் தன் பாடல் ஒன்றில்....

அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே இறைபக்தி அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே " என்கிறார்.

சித்தர்களை வகைப்படுத்த முடியுமே தவிர வரையறுக்க இயலாது. அவர்கள் தனித்துவமானவர்கள் ஆதியும் அந்தமும் ஆன இறைவனிடம் ஒடுங்குவதையே இலக்காக கொண்டிருந்தனர். இந்த வகைக்கு பட்டினத்தார், அருணகிரி நாதர், தாயுமானவர் போன்றோரை சொல்லலாம்.

இப்பொழுது நாம் பயன்படுத்தும் சித்த வைத்திய முறை அவர்கள் நமக்களித்த பொக்கிஷமே. உலோகங்கள், உப்புகள், பாஷாணங்கள், வேர்கள், இலைகள், பட்டைகள், பூக்கள், முத்து, பவளம், மற்றும், பல உடல் பொருட்கள் விலங்குகளின் உடலிலிருந்து கிடைக்கும் கஸ்தூரி, புனுகு சலம், சாணம், முதலியவற்றின் குணங்கள் எல்லாம் கண்டறிந்து அவற்றின் நோய்த்தீர்க்கும் பண்புகளை கண்டறிந்தவர்களும் அவர்களே .

ஜெர்மன், சுவீடன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் சித்தர்களின் மருத்துவ குறிப்புகளை வியப்புடன் ஆராய்ந்து வருகின்றன. சீனாவில் அநேகர் சித்த உணவு முறையே பின்பற்றுவதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. ஆஸ்ரமம் என்ற பெயரில் இவர்களுக்கு மாட மாளிகைகளோ, பக்த கோடிகளோ இல்லை என்பது போல சித்தர்களுக்கு அந்தரங்கமும் இல்லை, இதுவரை வழக்குகளேதும் பதிவானதுமில்லை.

இவர்கள் ரத்தம் குடிக்கும் அரசியவாதிகளுமல்லர், மனித அறிவு தின்னும் சாமியார்களுமல்லர். மாறாக இம்மியளவும் பிரதிபலன் பாராது மனிதகுல நல்வாழ்விற்கு தம்மை அர்ப்பணித்துக்கொண்ட சித்தர்களும் மகாத்மாக்களே!

பொது நிகழ்சிகளில் மரக்கன்று நடுவது நல்ல முன்னுதாரணம்!

JULY 02, ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும், பிற்படுதப்பட்டவர் களுக்ககவும் ஒரு மாற்று அரசியலை முன்வைத்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட SDPI யின் 3 ஆண்டு தொடக்க விழா இந்தியா முழுவதும் கொடியேற்று விழா மற்றும் ஒரு லட்சம் மரகன்றுகள் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக நமது ஊர் ஏர்வாடியில் நெல்லை மாவட்ட தலைவர் தலைமையில் நான்கு இடங்களில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

சிந்திக்கவும்: ஒவ்வொரு பொது நிகழ்சிகள், விழாக்கள் இவற்றில் இப்படி மரம்நடும் நிகழ்ச்சியை இணைத்து அரசியல் கட்சிகள், மற்றும் பொதுநல அமைப்புகள், தொண்டு அமைப்புகள் செய்ய ஆரம்பித்தால் இந்தியா ஒரு பசுமை நாடாக மாறும். நல்ல ஒரு முயற்சி வாழ்த்துக்கள். அதுபோல் நிகழ்ச்சிகள் நடத்த காவல்துறை அனுமதி வாங்க வேண்டும் என்று அரசு எப்படி சட்டம் வைத்துள்ளதோ அதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறும்போதும் இத்தனை மரங்கள் நட்ட வேண்டும் என்ற நிபந்தனையோடு அனுமதி கொடுத்தால் நன்றாக இருக்கும்.

வந்தாச்சு இ&சிகரெட் இனி, வராது கேன்சர்

புதுடெல்லி, ஜூலை 2: புகை பிடிப்ப வர்கள், புகையை சுவாசிப்பவர்களை நோயில் இருந்து காப்பாற்றும் வகை யில் இ&சிகரெட் விற்பனைக்கு வந்துள் ளது. குர்கானை சேர்ந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ‘ஜாய் 510’ என்ற அதன் விலை 1,650 ரூபாய். கடந்த ஆண்டில் ரிலீசான ஹாலி வுட் படம் ‘தி டூரிஸ்ட்’. ஜான் டெப் அதில் ஹீரோ. ஏஞ்சலினா ஜூலி ஹீரோயின்.

ரயிலில் எதிரெதிரே அமர்ந்து பயணம் செய்யும் காட்சி. அதில் சிகரெட்டை இழுத்து புகை விட்டுக் கொண்டே இருப்பார் டெப். முகத்தில் புகை படர்ந்தாலும் அமைதி காப்பார் ஏஞ்சலினா.

‘‘நான் புகை பிடிப்பது உன்னை பாதிக்கவில்லையா... என்று கேட்கும் டெப், இது எலக்டிரானிக் சிகரெட், பாதிக்காது’’ என்பார். ஏஞ்சலினா ஆச்சரியமாக பார்க்க, ‘‘நம்பவில்லையா..’’ என்றபடி அதன் தீ நாக்கை கையில் தேய்த்தபடி... இது எல்இடி லைட் என்று கூறுவார்.

ஆம். அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டே விற்பனை தொடங்கி விட்ட இ&சிகரெட், இந்தி யாவில் இப்போதுதான் அறிமுகமாகி உள்ளது. குர்கானை சேர்ந்த இணைய தள நிறுவனமான விண்ட்பைட் டாட் இன் இதை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து ‘ஜாய் 510’ என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.


பவுண்டன் பேனா வடிவில் இருக்கும் அதில், அழுத்தி இங்க் நிரப்ப இருக்கும் பகுதியும் உண்டு. பேனாவில் இங்க், இ&சிகரெட்டில் நிகோடின் திரவம். ஆம். இந்த நிகோடின்தான் சிகரெட் பிடிப்பவர்களை திருப்திபடுத்துகிறது. திரவத்தை சூடாக்க பேட்டரி, முனையில் எல்இடி விளக்கு.

‘ஜாய் 510’ சிகரெட்டின் ஒரு விசையை அழுத்தினால் பேட்டரி இயங்கி திரவம் சூடாகி புகை வரும். சிகரெட் முனையில் தீ நாக்கு போலவே விளக்கு எரியும். பிறகு வாயில் வைத்து இழுத்து வட்ட வட்டமாக புகை விடலாம்.

அந்த புகையால் யாருக்கும் பகையில்லை. இந்த இ&சிகரெட் சிலமுறை பயன்படுத்தி தூக்கி எறிவது ஸி300, நீண்ட காலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவது ஸி1,650 என 2 விலையில் கிடைக்கிறது. சிகரெட் பழக்கத்தை விட முடியாதவர்கள் இதற்கு மாறலாம், கேன்சரின் ஆபத்து இல்லாமல்!

Friday 1 July 2011

யானைக்கு வந்த வாழ்வை பாருங்கள்!

குருவாயூர்:  குருவாயூரில், 63 யானைகளுக்கு, இன்று முதல், ஆயுர்வேத சிகிச்சை துவங்குகிறது. குருவாயூர் தேவஸ்வத்தில், தற்போது, 63 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில், 12 யானைகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த யானைகள் உட்பட, 63 யானைகளுக்கும், 6 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவில் ஆயுர்வேத சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, 378 கிலோ ச்யவனப்ராசம், 189 கிலோ அஷ்ட சூரணம், 1,440 கிலோ பச்சைப் பயறு, 450 கிலோ கொள்ளு, 283 கிலோ சார்கோ பைரோஸ், 47 கிலோ வைட்டமின்கள், 95 கிலோ மஞ்சள்தூள், 5,670 கிலோ அரிசி ஆகியவை சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட உள்ளது. இந்த சிகிச்சை, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்கவும்: அட பாவிகளா! கோடிக்கணக்கான ஏழை மக்கள் நீரழிவு நோய் மற்றும் நோய்களில் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவ வசைதிகளை செய்து கொடுக்க முடியவில்லை. போதிய மருத்துவமனைகள் இல்லை, மருந்துக்கள் இல்லை. இதனால் அன்றாடம் சாகும் ஏழை மக்கள் ஆயிரம் ஆயிரம்.

இப்படி இருக்க இவர்கள் யானைகளுக்கு 6 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் செலவில் வைத்தியம் பார்க்கும் இவர்களை என்னவென்று சொல்வது. இந்த பணத்தை கொண்டு எத்தனையோ ஏழை உயிர்களை பாதுகாக்கலாம். ரேத்ததானம், கண்தானம் இப்படி ஒருபுறம் மக்கள் சமூக செயவைகளில் ஈடுபட்டு வரும் சூழலின் இவர்களை யானைக்கு வைத்தியம் பார்க்கிறார்களாம்

சாப்பிட ஒரு வேலை உணவு இல்லாமல் தினம் தினம் சாகும் மனிதர்கள் எத்தனை, அப்படியிருக்க இங்கு யானைக்கு 5,670 கிலோ அரிசி, 1,440 கிலோ பச்சைப் பயறு, 450 கிலோ கொள்ளு, 283 கிலோ சார்கோ பைரோஸ், என்று அள்ளி கொடுகிறார்கள். இவர்களுக்கு ஹிந்துத்துவா கற்றுகொடுத்த மனித நேயம் இதுதான்.

மாட்டு கறியை சாப்பிடாதே என்று கூறி அந்த மாட்டை சாகும் வரை பராமரிக்க இவர்கள் செய்தும் செலவு பல லட்ச்சங்கள். பசியில் வாடும் மனிதனை பராமரிக்க முடியவில்லை, இவர்கள் யானையும், மாட்டையும் பராமரிக்கிறார்கள். ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி என்ற பாடல் நினைவுக்கு வருகிறது.