Saturday 17 September 2011

ஆம்பூர் துத்திப்பேட் அருகே இருச்சக்கற வாகனத்தை ஷேர் ஆட்டோ மோதி ஒருவர் பலி

                             ஆம்பூர் : 17/09 துத்திப்பேட் அடுத்து  NMZ கம்பெனி அருகில் முஷ்தாக் (20 ) என்பவர் ஓட்டிவந்த இருச்சக்கற வாகனத்தை அதிவேகமாக வந்த ஷேர் ஆட்டோ மோதி படுகாயமடைந்தார், சிகிச்சைக்காக ஆம்பூர் G .H. மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பரிசோதித்த மருத்துவர் பதிக்கப்பட்ட நபர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார் என்று அருவித்துள்ளர். ஆம்பூர் மற்றும் பேர்ணாம்பட்டு செல்லும் வழில் அதிக ஷு  கம்பெனிகள் உள்ளன, இதில் மட்டும் சுமார் 6000 மேல் ஆண்கள் மற்றும் பெண்கள் வேலை செய்கின்றனர், துத்திப்பேட் மற்றும் பெரியவரிகம் இடையே 'C 'போன்ற குறுகிய வளைவு சாலை உள்ளது இதனால் எதிர்வரும் வாகனங்கள் தெரிவதில்லை, பல பேருந்துகள் செயல்பட்டாலும், ஒட்டுமொத்த நபர்களும் வேலைகளை முடித்துவிட்டு ஒன்றாக  கம்பனிகளில் இருந்து வெளிவருவதால் சேர் ஆடோக்கரர்கள் முந்திக்கொண்டு அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றுவதுமட்டும் அல்லாமல் அதிவேகமாக செல்கிறார்கள் இதுபோன்ற  சம்பவங்கள் பலமுறை நடைபெற்றும் பல உயிர்கள் இழந்தும் இங்குள்ள R.T.O.,S.H., மற்றும் காவல்துறையும் இதற்கான எந்த நிரந்திர தீர்வுக்கும் முயற்ச்சிகள் மேற்கொள்வில்லை என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெருவிக்கின்றனர்.


-அப்துல்லாஹ்