சமீபத்தில் ஆங்கில நாளிதழ் த இந்து தொடர்ந்து வெளியிட்ட விக்கிலீக்ஸ் கேபிள்களின் விளைவாக இந்தியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வருவதாக வீக்கிலீக்ஸ் வலைதளத்தின் நிறுவனர் ஜூலியன் அஸாஞ் லண்டனில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். அண்ணா ஹஸாரேயின் தலைமையில் நடைபெற்று வரும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தைப் போன்ற ஒன்று மகாத்மா காந்திக்கு பிறகு நடக்கவில்லை என்றும், உலகின் பல நாடுகளில் விக்கிலீக்ஸ் வெள்ளியிட்ட கேபிள்கள் முன்னெப்போதும் ஏற்பட்டிராத பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் அக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார்.நன்றி : க. திருநாவுக்கரசு,The Sunday Indian
படங்கள் : Right Way
