Friday 24 June 2011

14 வயது சிறுமியை கற்பழித்த 150க்கு அதிகமான காமக்கழுகுகள்!

 கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த சுதீர் (48) என்பவர் தனது 14 வயது மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது சமீபத்தில் தெரியவந்தது.

சினிமா பிரபலங்கள், விஐபிக்கள், பிரபல தொழிலதிபர்கள், காவல்துறை அதிகாரிகள் உள்பட பலரும் சிறுமியிடம் செக்ஸ் வைத்தது தெரியவந்தது. கேரளா மட்டுமின்றி தமிழ்நாடு, கர்நாடகாவிலும் பல விஐபிக்களின் பெயர் இதில் அடிபடுகிறது.

சினிமா பிரபலங்களின் உதவியுடன் அந்த சிறுமியை சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் சுதீர் நடிக்க வைத்தார். பின்னர், துணை நடிகை என்று சொல்லி விபசார புரோக்கர்களிடமும் அவளை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது சமீபத்தில் அம்பலமாகி, கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சிறுமி என்பதால் இதை பலாத்கார வழக்காக பதிவு செய்து கேரள மாநிலம் பரவூர் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கடும் விசாரணையில் தந்தை சுதீர் கொடுத்த தகவலின் பேரில் பெண் புரோக்கர் முதலில் பிடிபட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை சீரழித்த முக்கிய பிரபலங்கள் பெயர் பட்டியல் போலீசுக்கு கிடைத்தது.

இதற்கிடையே சிறுமியை குமரி மாவட்டம் பளுகல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (42) என்ற கான்ட்ராக்டர் ரூ.40 ஆயிரம் கொடுத்து கண்ணுமாமூட்டில் உள்ள தனது கெஸ்ட்ஹவுசில் வைத்திருந்தார் என்று தெரியவந்தது.

சிங்கப்பூர் தப்பிச்செல்ல திட்டமிட்டு இருந்த மணிகண்டனை சென்னை ஏர்போர்ட்டில் எர்ணாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பிஜோ அலெக்ஸாண்டர் தலைமையிலான போலீசார் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். சிறுமி உள்பட பலரையும் அவர் விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில் இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலாத்கார வழக்கில் 150 பேர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. தன்னுடன் இருந்தவர்களை நன்றாக ஞாபகம் இருப்பதாக மாணவி ( 9ம் வகுப்பு) கூறியுள்ளார். தங்கியிருந்த லாட்ஜ், பங்களா, கெஸ்ட்ஹவுஸ் ஆகியவற்றையும் கூறுகிறார். அவர் சொல்லும் தகவல்களின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
thagaval : சிந்திக்கவும்