
நாளிதழ்கள், வார மற்றும் மாதப் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் சமூக செல்வாக்கானது வழக்கமான மக்கள்நல பொருளாதாரத்தை மீறிச் செல்பவை. படித்தவர்கள் அதிகமுள்ள நாடுகளில் செய்தித்தாள்களை படிப்பவர்கள் மிக அதிகம். ஊடகங்களே மக்களை விழிப்புணர்வு பெற்றவர்களாக ஆக்குகின்றன.
நாளிதழ்களை பொருத்த வரை மற்ற எந்த நாட்டையும் விட இந்தியா முன்னணியில் இருக்கிறது. நாளிதழ்களை பொருத்த வரை 59,023,000 பிரதிகள் விற்பனையாகின்றன, அடுத்த இடத்திலிருக்கும் ஜெர்மனியில் 25,000,000 பிரதிகளே விற்பனையாகின்றன. நாளிதழ்கள் மற்றும் வாரா மற்றும் மாத இதழ்கள் ஆகியவற்றை கூட்டாக எடுத்துக்கொண்டாலும் 62,000,000 பிரதிகள் விற்று உலகில் சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாம் இடத்திலிருக்கிறது. ஆனால் செய்திகள் மக்களை சென்றடைவது என்று வருகிற போது உலகின் முதல் 10 இடங்களில் இந்தியா இல்லை. நபர் ஒருவருக்கு என்று வருகிற போது இந்தியா 1000 பேருக்கு 54.64 நாளிதழ்கள் என்ற விகிதத்தில் இருக்கிறது. இதில் உலக நாடுகளில் இந்தியா 28ஆம் இடத்திலிருக்கிறது. இதில் முதலிடத்திலிருக்கும் நார்வேயில் நாளிதழ்கள் 1000 பேருக்கு 554.10 என்ற விகிதத்திலிருக்கின்றன, அதாவது இந்தியாவை விட பத்து மடங்கு அதிகம். இதில் வார மற்றும் மாத இதழ்களையும் சேர்த்து கணக்கிடுகிற போது இந்தியா 48ஆவது இடத்திற்கு தள்ளப்படுகிறது. அதாவது 1000 பேருக்கு 60.09 என்ற விகிதத்தில் இருக்கிறது. இதிலும் நார்வேவுக்கே முதலிடம். வார மற்றும் மாத இதழ்கள் மக்களிடம் ஒரு கருத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை சொல்லத் தேவையில்லை. இதற்குக் காரணம் அவை செய்திகளை தீவிரமாக அலசுவதுடன் அவற்றைப் பற்றி பல்வேறு கருத்துக்களையும் தெரிவிக்கின்றன. தொலைக்காட்சி என்று வருகிற போதும் இந்தியாவில் பத்து லட்சம் பேருக்கு 0.58 தொலைக்காட்சி நிலையங்கள் என்ற அளவிலேயே இருக்கிறது. இது நார்வேயில் 82.5ஆக இருக்கிறது, இதில் உலகில் இந்தியாவின் இடம் 152. 2010ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி இந்தியாவில் 515 சானல்கள் இருக்கின்றன, இவற்றில் 150 சானல்களை பணம் செலுத்தி மட்டுமே பார்க்க முடியும். கேபிள் சந்தாதாரர்கள் விஷயத்தில் 1000 பேருக்கு 38.5 என்ற விகிதத்தில் இருக்கிறது.
செய்திகள் பரப்பப்படுவது என்பதை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, பணம் செலுத்தி பெற முடிவது, இரண்டு, தரமான உள்ளூர் ஊடகங்கள் மிகக் குறைவாக இருப்பது. இந்தியாவில் நாளிதழ்கள் மற்றும் வார மற்றும் மாத இதழ்கள் விலை மிகுந்தவையாக இருக்கின்றன, தொலைக்காட்சிகள் மக்களில் பலருக்கு கிடைக்கப்பெறாதவையாக இருக்கின்றன. இந்தியாவில் ஒருவர் தனது ஆண்டு வருமானத்தில் 2 முதல் 3 சதவிகிதத்தை செய்தித்தாள்களுக்காக செலவழிக்க வேன்டியுள்ளது. ஆனால் பிரிட்டனில் அது 1.5 முதல் 2 சதவிகிதமாக இருக்கிறது. ஆங்கில நாளிதழ்களின் தரத்திற்கு இணையாக சில இந்தி நாளிதழ்கள் வெளியாகின்றன, ஆனால் பிற மொழிகள் என்று வருகிறபோது நிலை மோசமாக இருக்கிறது. தொலைக்காட்சி விஷயத்திலும் பிராந்திய செய்தித் தொலைக்காட்சிகள் மக்களை சென்றடைவது குறைவாக இருக்கிறது. குறைவான கல்வியறிவு, இணையதின் வேகம் குறைவாக இருப்பது ஆகிய பிரச்னைகள் இதியாவில் இருப்பதால் அச்சு மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களே இந்தியாவிற்கு இப்போதைக்கு ஏற்றவை.
தகவல் : The Sunday Indian